LOADING

Type to search

இலங்கை அரசியல்

ஏறாவூரில் சிசு ஒன்றின் சடலம் மீட்கப்பட்டதோடு,சிசுவை பிரசவித்த 15 சிறுமியும்,சிறுமியை கர்ப்பமாக்கிய உத்தியோகத்தரும் கைது

Share

(24-01-2023)

ஏறாவூர் பிரதேசத்தில் பாழடைந்த காணியில் உயிரிழந்த நிலையில் சிசு ஒன்றை இன்று செவ்வாய்க்கிழமை (24) காலை மீட்டதுடன் சிசுவை பிரசவித்த 15 சிறுமி ஒருவரையும் அந்த சிறுமியை கர்ப்பமாக்கிய சுகாதார டெங்கு ஒழிப்பு பிரிவில் கடமையாற்றும் ஆண் ஒருவரையும் கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,,

ஏறாவூர் சுகாதார துறையில் டெங்கு நுளம்பு ஒழிப்பு பிரிவில் கடமையாற்றி வரும் ஆண் ஒருவர் அந்த பகுதியில் உள்ள வீடுகளை சோதனை நடவடிக்கைக்காக சென்ற நிலையில் புதிய காட்டுப்பள்ளி வீதியில் உள்ள 15 வயதுடைய சிறுமியின் வீட்டை சோதனை நடவடிக்கையின் போது சிறுமியுடன் தொடர்பு ஏற்பட்டதையடுத்து, சிறுமியுடன் உறவை ஏற்படுத்திய சிறுமியை கர்ப்பமாக்கியுள்ளார்.

கர்ப்பமடைந்த சிறுமி பாடசாலை செல்வதை நிறுத்திய நிலையில் சம்பவ தினமான இன்று (24)காலை 9 மணியளவில் சிறுமி தனது வீட்டில் குழந்தை யை பிரசவித்துள்ளதையடுத்து பிறந்த சிசுவை சிறுமியின் வீட்டின் முன்னால் உள்ள பாழடைந்த காணியில் வீசி எறிந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து குறித்த சிறுமியையும் சிறுமியை கர்ப்பமாக்கிய டெங்கு ஒழிப்பு பிரிவில் கடமையாற்றி வந்த அதே பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடையவர் உட்பட இருவரை கைது செய்துள்ளதுடன் கைது செய்யப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதித்த துடன் மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.