LOADING

Type to search

இலங்கை அரசியல்

இலங்கையின் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பில் காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிகோரி கருப்பு ஜனவரி போராட்டம்

Share

(28-01-2023)

மட்டக்களப்பில் கொட்டும் மழையிலும் இலங்கையில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிகோரி பிரகடனப்படுத்தப்பட்ட ‘ கருப்பு ஜனவரி’ தினமான இன்று வெள்ளிக்கிழமை (27) நீதிகோரி காந்தி பூங்காவில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத் தூபியில் கறுப்பு பட்டி போராட்டத்தில் ஊடகவியலாளர்கள் ஈடுபட்டனர்.

இலங்கையில் ஊடகத் துறையை பொறுத்த வரையில் கறைபடிந்த மாதமாகவே காணப்படுகிறது. பல்வேறு ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள், ஊடகவியலாளர்கள் கொலை, ஊடகவியலாளர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை என்பவற்றுக்கு நீதி கோரி, வருடம் தோறும் ஜனவரி மாதத்தை ‘கறுப்பு ஜனவரி’யாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

இதனடிப்படையில் மட்டு ஊடக அமையம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போராட்டத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட மற்றும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவாக படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத் தூபியில் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவு கூரப்பட்டதையடுத்து தொடர்ந்து கருப்பு துண்டை வாயில் அணிந்து கொண்டு அரசாங்கமே ஊடக சுதந்திரத்தினை உறுதிப்படுத்து ஊடகவியலாளர்கள், சுதந்திரமாக செயல்பட அனுமதி ,ஊடக அடக்குமுறை உடன் நிறுத்து, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியை பெற்று கொடு, காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்து போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு அமைதியான முறையிலான கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஒரு மணித்தியாலம் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து விலகிச் சென்றனர்.