LOADING

Type to search

இலங்கை அரசியல்

வவுனியாவில் ஆசிரியரின் தாக்குதலுக்குள்ளான மாணவன் வைத்தியசாலையில் அனுமதி

Share

வவுனியா – சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவன் மீது ஆசிரியர் கண்முடித்தனமாக தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் 3ம் திகதி புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

வவுனியா – சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவன் நேற்று பாடசாலை முடிந்து வீட்டிற்கு சென்ற சிறுவனின் முகத்திலும் தலையிலும் அடி காயங்கள் காணப்பட்டதை அடுத்து பெற்றோர் சிறுவனிடம் விசாரித்ததில் அவரது ஆசிரியர் தாக்கியதாக தெரிவித்துள்ளான்.

இதனை தொடர்ந்து சிறுவனின் தந்தை குறித்த ஆசிரியருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சிறுவனை தாக்கியதற்கான காரணம் என்ன மற்றும் காலுக்கு கீழ் அடித்து இருக்கலாமே என்றும் கூறியுள்ளார்.

இதற்கு பதில் அளித்த ஆசிரியர் உங்கள் மகனுக்கு கற்பித்த பாடம் தெரியவில்லை என்றும் அதனாலேயே அடித்தேன் என்றும் அடிக்கும் போது சிறுவன் அங்கும் இங்கும் ஓடியதால் முகத்தில் காயம் ஏற்பட்டு விட்டது என்று பதிலளித்துள்ளார்.

அத்துடன் இவ்வாறு கேள்வி கேட்கும் நீங்கள் நாளையுடன் பிள்ளையை வந்து கூட்டி சென்று விடுங்கள் என்று எந்தவித குற்ற உணர்ச்சியும் இன்றி ஆசிரியர் பதில் அளித்துள்ளார்.
அதை ஆட்சேபிக்க பெற்றோர் சிறுவனை நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா பொது வைத்தியசாலையில் கொண்டு சென்று அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில் சிறுவனின் நெற்றியில் காயமும் கண் பாதிப்படைந்துள்ளதாக வும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

மேலும் இது தொடர்பாக வைத்தியசாலை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் சட்ட வைத்திய அதிகாரியின் விசாரனைக்கும் உட்படுத்த பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.