LOADING

Type to search

உலக அரசியல்

‘ஹமாஸ் போரால் பாலஸ்தீன மக்கள் மோசமான விளைவுகளை சந்தித்து வருகின்றனர்’ – அமெரிக்கா

Share

ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 250-க்கும் மேற்பட்டவர்களை ஹமாஸ் அமைப்பினர் பணய கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதற்கு பதிலடியாக காசாவில் இஸ்ரேல் ராணுவப்படை அதிரடியாக நுழைந்து தாக்குதல் நடத்தியது. இந்த போரில் சுமார் 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டனர். மேலும் லட்சக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சமரச பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில், காசாவில் இஸ்ரேல் ராணுவம் தனது தாக்குதலை தொடர்ந்து நிகழ்த்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை முற்றிலுமாக ஒழிக்கும் வரை போர்நிறுத்தம் ஏற்படாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்தார். இதற்கிடையில் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்ரலிய பணய கைதிகள் மீட்கப்பட்ட நிலையில், இன்னும் 101 பேர் காசாவில் இருப்பதாக இஸ்ரேல் தரப்பில் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஹமாஸ் அமைப்பினர் தொடங்கிய போரால் பாலஸ்தீன மக்கள் மோசமான விளைவுகளை சந்தித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. பணய கைதிகளை மீட்டுக் கொண்டு வந்து, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மக்களின் துன்பங்களை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், விரைவில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்த அமெரிக்கா தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.