LOADING

Type to search

உலக அரசியல்

மேகாலயாவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.6 ஆக பதிவு

Share

மேகாலயாவின் மேற்கு கரோ மலைப்பகுதியில் மதியம் 11.46 மணியளவில் (இந்திய நேரப்படி) நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவானதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 9 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 25.96 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 90.34 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.