LOADING

Type to search

பொது

குடும்பத் தகராறால் மனைவியை கொலை செய்த கொடூரம்!! கணவன் பரபரப்பு வாக்குமூலம்

Share

குடும்ப பிரச்னையின் போது வாக்குவாதம் முற்றியதில் கணவன் கத்தியால் குத்தியதில் மனைவி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், விருதுநகர் மாவட்டம் என்.ஜி.ஓ காலனி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் மற்றும் கற்பகம் தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், தம்பதிகளுக்கிடையில் உறவு சரியில்லாமல் இருந்துள்ளது. மனைவி கற்பகம் மீது கண்ணனுக்கு மிகவும் சந்தேகம் இருந்துள்ளதாக தெரிகிறது இதனால் அடிக்கடி இருவருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. வழக்கம்போல நேற்று காலையும் கண்ணன் மற்றும் கற்பகத்துக்கு இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் தொடர்ந்து முற்றியுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த கண்ணன், கற்பகத்தை கத்தியால் குத்தியுள்ளார். அதையடுத்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். மனைவியை கொன்றதாகக் கூறி விருதுநகர் ஊரக காவல்நிலையத்தில் கண்ணன் தானாகவே சரணடைந்தார். சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர் கற்பகத்தின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.