LOADING

Type to search

மரண அறிவித்தல்

3ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும் | செல்லத்துரை கனகம்மா (இணுவில் கிழக்கு- காரைக்கால்)

Share

யாழ்ப்பாணம் இணுவில் கிழக்கு காரைக்காலைப் பிறப்பிடமாகவும், கனடா மொன்றியாலை வதிவிடமாகவும் கொண்ட
செல்லத்துரை கனகம்மா அவர்களின்
31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்.

பெற்ற தாய் நீங்கள் எம் மீது தீராத பற்று வைத்து வளர்த்தீர்
பாலகராய் நாம் இருக்கையிலே நாம் பசித்திருக்க விடவில்லை
உற்றவளாய் எம் உயர்விற்காய் உம்மை ஓயாது அர்ப்பணித்தீர்
உடனிருந்து கவனித்து உலகெங்கும் நாம் செல்ல உதவினீர்கள்
சுற்றத்தார் அனைவரோடும் அன்பொழுகப் பழகியதால் அவர்
சிந்தையில் பதிந்த தாயாக தங்கையாக நண்பியாக திகழ்ந்தீர்
முற்றத்து மல்லிகை போல் மணம் வீசி நின்றீர்கள்
முடிவு நாள் வந்தவுடன் எமைப் பிரிந்து சென்றீர்கள்

பெரியதோர் குடும்பத்தின் தலைவியாய் வீற்றிருந்து
பெண்ணின் பெருமைதனை பறை சாற்றி நின்றீர்கள் !
உரியவராய் அன்பைச் சொரிந்து அக்கறையும் காட்டி
உத்தம அன்னை என ஊரவர்கள் பேசும் பேறு பெற்றீர்
பிரியமுள்ள பாட்டியாய் பேரர் பூட்டர் மற்றவர் மீதெல்லாம்
பாசத்தைக் கொட்டி நின்ற பெண் தெய்வம் தங்களை
கரியதொழு நாளில் இழந்தோம் காலங்கள் கடந்து சென்றிடினும்
கனிவின் பொக்கிசமாம் உமை நாம் என்றும் மறவோம் அம்மா

அன்னாரின் மறைவுச் செய்தியைக் கேள்வியுற்று பல வழிகளிலும் எம்மோடு தொடர்பு கொண்டு தங்கள் அனுதாபங்களைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும், மொன்றியாலில் நடைபெற்ற இறுதிக்கிரியைகளில் பங்கு பற்றியவர்களுக்கும், மேலும் பல்வேறு வகையில் உதவிகள் செய்தவர்களுக்கும் எமது நன்றி.

இங்ஙனம் தங்கள் பிரிவால் வாடும் மக்கள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், மற்றும் உற்றார் உறவினர்கள்.