LOADING

Type to search

கனடா அரசியல்

Canada’s Senthil umaran from ‘Nivaranam’ had crossed 100 life-saving Heart surgeries in Sri Lanka

Share

Grand celebrations at the Lanka Hospital in Colombo, with many of beneficiaries who had surgeries

இலங்கையில் 100 வது இருதய சத்திர சிகிச்சைகளைச் செய்து அவர்கள் உயிர்களைக் காப்பாற்றி கனடா நிவாரணம் அமைப்பின் ஸ்தாபகர் செந்தில் குமரன்

கொழும்பு லங்கா வைத்தியசாலையில் இடம்பெற்ற சிறப்பு வைபவத்தில் இலங்கைக்கான கனடிய தூதரகத்தின் உயர் அதிகாரி கலந்து சிறப்பித்தார்.

கடந்த 04-03-2023 அன்று கொழும்பில் அமைந்துள்ள ‘லங்கா வைத்தியசாலையில்’ கனடா ‘நிவாரணம்’ அமைப்பின் ஸ்தாபகர் செந்தில் குமரன் கலந்து சிறப்பித்த வைபவம் ஒன்றில் அவரது நிவாரணம் அமைப்பின் உதவியோடு அந்த லங்கா வைபத்தியசாலையில் மேற்கொள்ளப்பெற்ற 100 வது இருதய சத்திரசிகிச்சையை வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பெற்றது தொடர்பான கொண்டாட்டம் இடம்பெற்றது. இதில் இலங்கைக்கான கனடிய தூதரகத்தின் உயர்அதிகாரி ஒருவரும் கலந்து சிறப்பித்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் பங்கேற்க இலங்கை முழுவதும் இருந்து முன்பு அறுவை சிகிச்சை செய்த பல பயனாளிகளுடன் அவர்களது உறவினர்களும் வந்திருந்தனர். மார்ச் 4 ஆம் தேதி லங்கா மருத்துவமனை 100 உயிர் காக்கும் இதய அறுவை சிகிச்சைகளை கடக்கும் கொண்டாட்டம் இடம்பெற்றது. அன்று பிறந்த நாட்தொடக்கம் கடுமையான இதய நோயால் பாதிக்கப்பட்ட முகமலையைச் சேர்ந்த 12 வயது சிறுமியான வைணவி நிஷாந்தனுக்கு , , வெற்றிகரமான திறந்த இதய அறுவை சிகிச்சை செய்யப்பெற்றது

இந்த வைபவத்தில் இலங்கைக்கான கனேடிய தூதரகத்தின் அரசியல் மற்றும் வர்த்தக ஆலோசகரான திரு. டேனியல் பூட், முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு அனைவரையும் பாராட்டி கனடா நிவாரணம் அமைப்பின் ஸ்தாபகர் செந்தில் குமரன் அவர்களையும் நேரடியாகப் பாராட்டினார். .

இந்த அறுவை சிகிச்சைகளுக்கு தன்னார்வத் தொண்டு செய்ததற்காக இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் காந்தி, டாக்டர் லுஷாந்தா மற்றும் அவர்களது முழு அணியிலும் கனடியப் பாராளுமன்ற உறுப்பினர் ஷான் சென் அவர்கள் வழங்கிய பாராட்டுப் பத்திரங்கள் வழங்கப்பெற்றன.

மேலும். டாக்டர் குருபரன், டாக்டர் லட்சுமன், டாக்டர் அருல்னிதி, டாக்டர் ரகு ராகநாதன், டாக்டர் சரித் டி சில்வா, டாக்டர் கீத், டாக்டர் கார்த்திக் மற்றும் டாக்டர் அம்பிகா ஆகியோருக்கு சிறப்பு நன்றி தெரிவிக்கப்பெற்று அவர்களுக்கும் பாராட்டுப்பத்திரங்கள் வழங்கப்பெற்றன.
இவ்வாறான உடனடி அறுவை சிகிச்சைகள் . அவர்களுக்கு செய்யப்படாமல் இருந்திருந்தால் , பலர் தங்கள் உயிர்களை இழந்திருப்பார்கள். டாக்டர் சிங்கபுலி, முழு மருத்துவ மற்றும் பிற ஊழியர்களும், மிக முக்கியமாக பாராட்டப்பட வேண்டியவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டது. இந்த விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்றுவதற்காக கனடா செந்தில் குமரன் அவர்களுடன் இணைந்து அயராது உழைத்ததற்காக அவரது இலங்கைக்கான ஒருங்கிணைப்பாளர்களான நாதன், லங்கா மருத்துவமனையைச் சேர்ந்த அஸ்லம் & விஷ்ணு ஆகியோருக்ம் சிறப்பு நன்றயைத் தெரிவித்தார் செந்தில் குமரன் அவர்கள். கனடா மற்றும் இலங்கையில் உள்ள அனைத்து ஊடகங்களுக்கும் செந்தில் குமரன் தனது நன்றியைத் தெரிவித்தார், அவர்கள் தனது திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு பரப்ப தனக்கு உதவியாக செயற்பட்டார்கள் என்றும் செந்தில் குமரன் அவர்கள் பாராட்டுத் தெரிவித்தார். இந்த நிகழ்வை வமலோசனன் லோஷான் அவர்கள் அழகாக தொகுத்து வழங்கினார்.

வைபவத்தின் இறுதியில் அனைவருக்கும் நன்றி தெரிவித்த கனடா ‘நிவாரணம் அமைப்பின் ஸ்தாபகர் செந்தில் குமரன் அவர்கள் தனது உரையில் … ” என் ஆர்வத்தைத் தொடர உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் எனக்கு பலம் அளித்தத அனைவருக்கும் நன்றி! . ஆதரவின் ஒரு பெரிய தூணாக இருப்பதற்கும், நான் மிகவும் விரும்பியதைச் செய்ய ஊக்குவித்ததற்கும் நன்றி எனது துணைவியாருக்கு நன்றி , நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மற்றும் குரலற்றவர்களுக்கு உதவிய நிவாரணம் அமைப்பின் கனடா நன்கொடையாளர்களுக்கு நன்றி. இந்த நன்கொடையாளர்களான நீங்கள் இல்லாமல், எதுவும் சாத்தியமில்லை. இந்த உயிர்களைக் காப்பாற்றுவதில் பெருமிதம் கொள்ளுங்கள். இந்த வெற்றியானது எமது முயற்சியின் ஒரு மைல் கல்லாகும்’ இவ்வாறு தெரிவித்தார் கனடா நிவாரணம் அமைப்பின் ஸ்தாபகர் செந்தில் குமரன் அவர்கள்.