LOADING

Type to search

இலங்கை அரசியல்

தமிழ் மக்களுக்கான தீர்வுகளை வழங்க இயலாத அரசதலைவர்; தமிழர் பகுதிகளுக்கு எதற்கு விஜயம் செய்கிறார் – கேள்வி எழுப்புகிறார் ரவிகரன்

Share

நடராசா லோகதயாளன்.

தமிழ் மக்களுக்கான தீர்வுகளை வழங்க இயலாத விக்கிரமசிங்க புகைப்படம் எடுப்பதற்காகத்தான் யாழிற்கும், வன்னிக்கும் வருகைதருகின்றாரா என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க தமிழர் பகுதிகளுக்கு வந்து சிரித்தபடி புகைப்படம் எடுபதை மாத்திரம் செய்யாமல், நாட்டின் பொறுப்புவாய்ந்த அரச தலைவராக தமிழ் மக்களுக்குரிய தீர்வுகளை வழங்க முன்வரவேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தலைவி ஜெனிற்ரா கைதுசெய்யப்பட்டமையைக் கண்டித்து 08.01.2024இன்று முல்லைத்தீவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டப்பேரணியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.