LOADING

Type to search

கனடா அரசியல்

கனடாவில் இருந்து மாதகலுக்குச் சென்றவர் மூச்சுவிட சிரமப்பட்ட நிலையில் உயிரிழப்பு!

Share

மூச்செடுக்க சிரமப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆணொருவர் 26-02-2024 அன்று உயிரிழந்துள்ளார். கனடாவில் வசிக்கும் சோதிலிங்கம் கந்தசாமி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாதகல் கிழக்கு, மாதகல் என்ற முகவரியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார். இந்நிலையில் அவருக்கு ஒரு நாள் முன்னதாக மூச்சு எடுப்பதில் சிரமம் ஏற்பட்டதால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி 2602-2024 அன்று உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.அவரது சடலம் கனடாவிற்கு கொண்டு வரபப்படுமான என்ற தகவல் கிடைக்கவில்லை