LOADING

Type to search

இலங்கை அரசியல்

தமிழ்ப் பற்றோடும் தமிழ்ப்பணி நோக்கோடும் வாழ்ந்த ஈழவேந்தன் காலமானார்! – பழ. நெடுமாறன் இரங்கல் அறிக்கை

Share

ஈழவேந்தன் காலமானார்!

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் இரங்கல் அறிக்கை

இலங்கை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், ஈழத் தமிழர்களுக்கான தொண்டிற்குத் தன்னை முழுமையாக ஒப்படைத்துக்கொண்டவருமான அருமை நண்பர் ஈழவேந்தன் அவர்கள் கனடாவில் காலமான செய்தி அறிந்து மிக்க வேதனையடைந்தேன்.

தமிழ்நாட்டில் பல காலம் தங்கியிருந்து இந்தியா முழுமையும் சென்று ஈழத் தமிழரின் அவலங்களைக் குறித்து இடைவிடாது பரப்புரை செய்த பெருமைக்குரியவர்.

தொண்டு, துன்பம், தியாகம் ஆகியவற்றின் வடிவமாகத் திகழ்ந்து மறைந்த அவருக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் வீரவணக்கம் செலுத்துகிறேன். அவரது பிரிவினால் வருந்தும் அவரின் துணைவியாருக்கும் மற்றும் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புள்ள,

(பழ. நெடுமாறன்)
தலைவர்.