LOADING

Type to search

இந்திய அரசியல் கனடா அரசியல்

இந்தியப் பொதுத் தேர்தலில் தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிகளில் வெற்றிவாகை சூடி தமிழர்களின் பலத்தை நிரூபித்து விட்டீர்கள்

Share

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ள உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைமையகம்

“அண்மையில் நடைபெற்று முடிந்த இந்தியப் பொதுத் தேர்தலில் தாங்களும் தங்கள் கட்சியினரும் எதிர்பார்த்தது போன்று தமிழ்நாட்டின் அனைத்து 40 தொகுதிகளிலும் வெற்றிவாகை சூடி தமிழர்களின் பலத்தை நிரூபித்து விட்டீர்கள். ஏனைய தேசியக் கட்சிகள் மேற்கொண்டான பொய்யான பிரச்சாரத் தந்திரங்களையெல்லாம் முறியடித்து தமிழ் நாட்டின் பலத்தை உலகிற்கு எடுத்துக் காட்டிய தாங்கள் உலகத் தமிழர்களின் ஒப்பற்றத் தலைவராகவும் விளங்குகின்றீர்கள் என்பதே உண்மை. எனவே தங்கள் தமிழ்நாட்டிலும் ‘இந்தியா’ என்ற புகழ் மிக்க ஜனநாயக தேசத்திலும் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ அனைத்து முயற்சிகளையும் தொடர்ச்சியாக மேற்கொள்வீர்கள் என்றும் நாம் நிச்சயமாக நம்புகின்றோம்”

இவ்வாறு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ள கனடாவில் இயங்கிவரும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைமையகத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்கம் அவர்கள் இயக்கத்தின் சார்பில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி வாழ்த்துச் செய்தியில் தொடர்ந்து செயலாளர் நாயகம் குறிப்பிடுகையில் தமிழ்நாட்டில் மட்டுமல் உலகில் ஏனைய நாடுகளிலும் தமிழ் மொழியையும் தமிழர் பண்பாட்டையும் கலைகளையும் காப்பதற்கு தாங்கள் ‘அயலகத் தமிழர்களுக்கான’ பிரிவொன்றை ஆரம்பித்துள்ளீர்கள்.

எமது உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கமும் கடந்த பல ஆண்டுகளாக உலகின் பல நாடுகளிலும் மாநாடுகளை நடத்தி பல பணிகளை ஆற்றிவருகின்றோம்.

எனவே எமது இயக்கமும் தங்கள் அரசோடும் தமிழக மக்களோடும் இணைந்து எதிர்காலத்தில் பல ஆரோக்கியமான தமிழ் மொழி தொடர்பான பணிகளை மேற்கொள்ள தங்கள் அனுமதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்.

இங்ஙனம்

துரை கணேசலிங்கம்
செயலாளர் நாயகம்- உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம்- தலைமையகம்- கனடா
06-06-2024