LOADING

Type to search

இந்திய அரசியல்

உலகின் சக்தி வாய்ந்த தலைவர் பிரதமர் மோடி – சந்திரபாபு நாயுடு புகழாரம்

Share

பழைய நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.பி.-க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: உலகளவில் சிறந்த தலைவர் பிரதமர் மோடி. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் மகத்தான வளர்ச்சி அடைந்துள்ளோம். மோடி கூறியதுபோல், உலகளவில் 2047-ல் இந்தியா வளர்ந்த மற்றும் வல்லரசு நாடாக மாறும். உலகின் சக்தி வாய்ந்த தலைவர் பிரதமர் மோடி. சரியான நேரத்தில் சரியான தலைவரை இந்தியா மீண்டும் தேர்வு செய்துள்ளது. மோடியின் பிரசாரம் ஆந்திராவில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.

    பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பேசும்போது கூறியதாவது: இந்தியர்களின் அனைத்து விருப்பங்களையும் பிரதமர் மோடி நிறைவேற்றுவார். இம்முறை எதிர்க்கட்சி வரிசையில் அமரும் இந்தியா கூட்டணி கட்சிகள், அடுத்த முறை அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடையும். பிரதமராக மோடியை தேர்வு செய்வதில் ஐக்கிய ஜனத தளம் நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறது. மோடியின் தலைமையில் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம். தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த பிளவும் இல்லை. மோடி எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும் நாங்கள் உறுதுணையாக இருப்போம். இவ்வாறு நிதிஷ் குமார் பேசினார்.