LOADING

Type to search

இந்திய அரசியல்

பாடசாலைக்கு பணம் கட்டமுடியாததால் தந்தை தூக்கில் தொங்கி உயிர் நீத்தார்

Share

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கொமாரபாளையம் இந்திரா நகரில் வசித்து வரும் வேலுசாமி மற்றும் ஸ்ருதி தம்பதியினருக்கு சஞ்சய் மற்றும் அஜய் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களில் சஞ்சய் தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு அஜய் 4ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவருடன் சுருதி மகன்கள் இருவருக்கும் பள்ளி கட்டணம் கட்ட வேண்டும் கட்டணம் செலுத்தாததால் இருவரும் பள்ளிக்கு செல்லவில்லை என்று கூறியுள்ளார். இதனைக் கேட்டு மனவேதனை அடைந்த வேலுச்சாமி பணத்தை எப்படியாவது கட்ட ஏற்பாடு செய்கின்றேன் என கூறிவிட்டு படுக்கையறைக்கு சென்றுள்ளார். அதன் பிறகு கதவை உள் பக்கமாக பூட்டிக்கொண்டார்.

பிறகு வெகு நேரம் ஆகியும் அவர் கதவை திறக்காததால் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது வேலுச்சாமி படுக்கையறையில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சுருதி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து வேலுசாமியை மீட்டார். பிறகு அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.