LOADING

Type to search

இலங்கை அரசியல்

இந்திய அரசாங்கத்தினால் ஹஜ் பொருநாளை முன்னிட்டு உலர்உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு.

Share

மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்

இலங்கை -இந்திய நல்லுறவை மேம்படுத்தும் வகையில் ஹஜ் பொருநாளை முன்னிட்டு மன்னார்,மற்றும் முசலி பிரதேச செயலக் பிரிவை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு 17-06-2024 அன்றைய தினம்(17)உலர் உணவுப் பொருதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

மன்னார் அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையில் வைத்து 78 குடும்பங்களுக்கும்,முசலி தேசிய பாடசாலையில் வைத்து 80 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இலங்கைக்கான இந்திய துணை தூதுவர் சாய்முரளி தலைமையில் குறித்த உலர் உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இவ் நிகழ்வில் இந்திய தூதரக அதிகாரிகள் , பாடசாலை அதிபர்கள் மற்றும் பலர் கலந்து கொன்டிருந்தனர்.

இதன் போது தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு பத்தாயிரம் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் மேற்படி வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.