LOADING

Type to search

இலங்கை அரசியல்

ஒட்டிசுட்டான் மகாவித்தியாலய நிதி நிர்வாக முறைகேடுகள் விவகாரம் – விசாரணை குழு அமைக்க பிரதம செயலாளர் பணிப்பு

Share

முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் பாடசாலை அதிபரின் நிதி நிர்வாக முறைகேடுகள் தொடர்பாக சுயாதீன விசாரணைக்குழுவை அமைத்து விரிவான அறிக்கை வழங்குமாறு வடமாகாண பிரதம செயலாளர் முல்லைத்தீவு அரசாங்க அதிபரை பணித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவது,

குறித்த பாடசாலையில் நிர்வாக நிதி முறைகேடு தொடர்பாக குறித்த பாடசாலையில் சமூகத்தினரால் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தது.

எனினும் குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் வடமாகாண கல்வி மௌனம் காத்து வந்த நிலையில் வட மாகாண பிரதமர் செயலாளர் மற்றும் முல்லைத்தீவு அரசாங்க அதிபருக்கு குறித்த விடயம் தொடர்பில் முறைப்பாடு முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை குழு ஒன்றை அமைத்து தனக்கு விரிவான அறிக்கை ஒன்றை வழங்குமாறு வடமாகாண பிரதம செயலாளர் இ. இளங்கோவன் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் உமா மகேஸ்வரனுக்கு எழுத்து மூலமான கடிதத்தை அனுப்பி உள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் முல்லைத்தீவு அரசாங்க அதிபரை தொடர்பு கொண்டு கேட்டபோது பிரதம செயலாளரால் அனுப்பப்பட்ட கடிதம் கிடைத்தமையை உறுதி செய்தார்.