LOADING

Type to search

இந்திய அரசியல்

சபரிமலை தந்திரி பொறுப்பை மகனிடம் ஒப்படைக்க முடிவு?

Share

கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலின் முக்கிய பூஜைகளை கேரள மாநிலம் செங்கனூர் பகுதியை சேர்ந்த தாழமண் தந்திரி குடும்பத்தை சேர்ந்தவர்களே நடத்தி வருகின்றனர். சபரிமலை அய்யப்பன் கோவில் குறித்த அனைத்து முக்கிய முடிவுகளையும் தாழமண் தந்திரி குடும்பத்தினர்தான் எடுப்பார்கள். தற்போது சபரிமலை அய்யப்பன் கோவில் தந்திரியாக (தலைமை பூசாரி) கண்டரரு ராஜீவரு, கண்டரரு மகேஷ் மோகனரு ஆகியோர் இருந்து வருகின்றனர். இவர்கள் இருவரும்தான் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தந்திரி பொறுப்பில் இருப்பார்கள். இந்த நிலையில் தந்திரி பொறுப்பில் இருந்து கண்டரரு ராஜீவரு விலக முடிவு செய்துள்ளதாகவும், தந்திரி பொறுப்பை மகன் கண்டரரு பிரம்மதத்தனிடம் வழங்க உள்ளதாகவும் சமீபத்தில் செய்தி வெளியானது. ஆகஸ்ட் 16-ம்தேதி வழிபாட்டுக்காக கோவில் நடை திறக்கப்படும்போது, கண்டரரு பிரம்மதத்தன் பொறுப்பேற்க உள்ளதாகவும், அன்றைய தினம் அவரது முன்னிலையிலேயே கோவில் நடையை மேல்சாந்தி திறக்க உள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டது. இந்த செய்தி வைரலாக பரவிய நிலையில், பதவி விலகல் தொடர்பான தகவலை கண்டரரு ராஜீவரு மறுத்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், “இந்த தகவல் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. எனது மகன் எனது பூஜைக்கு உதவியாக சில காலம் இருந்துள்ளார். அதேபோல் இந்த முறையும் எனக்கு உதவியாக இருப்பார்” என்றார்.