LOADING

Type to search

இந்திய அரசியல்

ஜூலை 27ல் திமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம்!

Share

மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகத்தை வஞ்சித்த பாஜக அரசை கண்டித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக அறிவித்துள்ளது. இது குறித்து திமுக வெளியிட்ட அறிவிப்பில், “ஒரு நாட்டின் பட்ஜெட் என்பது அனைத்து மாநிலங்களுக்கும் உரிய பங்கை பகிர்ந்தளித்து நாடு முழுவதும் சமச்சீரான வளர்ச்சியை உருவாக்க உதவுவதுடன் நாட்டில் வாழும் கடைக்கோடி மனிதர்களின் வாழ்வை மேம்படுத்தும் கொள்கைப் பிரகடனமாக இருக்க வேண்டும். ஆனால், இந்த ஆண்டின் மத்திய அரசின் பட்ஜெட், ஒட்டு மொத்த இந்தியாவுக்கான பட்ஜெட்டாக தெரியவில்லை. மாறாக, தங்கள் ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக சில மாநிலங்களுக்கு மட்டும் நிதியை தாராளமாக அள்ளிக் கொடுத்தும், நாட்டின் வளர்ச்சியில் பெரும்பங்கு வகித்து வரும் தமிழகம் போன்ற மாநிலங்கள் மீது வன்மத்தை கக்கும் வகையிலும் இந்த ஆண்டின் பட்ஜெட் அமைந்துள்ளது. மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதி, தமிழகம் சந்தித்த 2 பேரிடர் இழப்புகளுக்கு நிதி வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்வைத் கோரிக்கைள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு, சில மாநிலங்களுக்கு மட்டும் பேரிடர் நிதி அள்ளி வழங்கப்பட்டுள்ளது. எனவே, மத்திய பட்ஜெட்டில் மாற்றான்தாய் போக்குடன் தமிழகத்தை வஞ்சித்த பாஜக அரசைக் கண்டித்து ஜூலை 27-ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்டத் தலைநகரங்களில் திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.