LOADING

Type to search

சினிமா

அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா – 2’ திரைப்படம் 2025க்கு தள்ளிப் போகிறது

Share

நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படம் இந்திய அளவில் வசூலில் சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து புஷ்பா-2 படப்பிடிப்பு கடந்த ஒரு வருடமாக நடந்து வருகிறது. நடிகர் பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட நடிகர்கள் இதில் நடித்து வருகின்றனர். புஷ்பா-2 படத்தின் 2 பாடல்கள் மற்றும் முன்னோட்டம் ஆகியவை வெளியாகி மக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது. வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி புஷ்பாபு-2 வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால் படத்தின் இறுதி கட்டப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. இதனால் படம் வெளி வருவதில் தாமதம் ஏற்படும் என கூறப்பட்டது.

இந்நிலையில் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா – 2’ திரைப்படம் வரும் டிசம்பரில் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், 2025 ஏப்ரலுக்கு தள்ளிப் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில காட்சிகள் மற்றும் இறுதிகட்ட பணிகள் காரணமாக படம் வெளியீடு தள்ளிப் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.