LOADING

Type to search

உலக அரசியல்

ஹெலிகாப்டர் விபத்து; நேபாளத்தில் 5 பேர் பலி

Share

நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் இருந்து மதியம் 1.54 மணியளவில் ஹெலிகாப்டர் ஒன்று பயணிகளை ஏற்றி கொண்டு ரசுவா பகுதியை நோக்கி சென்றுள்ளது. எனினும், புறப்பட்ட 3 நிமிடங்களில் தொடர்பை இழந்துள்ளது. 9என்-ஏ.ஜே.டி. என்ற எண் கொண்ட ஏர் டைனஸ்டி வகையை சேர்ந்த ஹெலிகாப்டர் ஆனது, அந்நாட்டின் வடமேற்கே மலை பகுதியில் சென்றபோது, திடீரென விபத்தில் சிக்கியது. இதில், ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் உயிரிழந்து உள்ளனர். நுவகோட் மாவட்டத்தில் சிவபுரி பகுதியில் வார்டு எண் 7-ல் இருந்து பயணிகள் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. அவர்களில் 2 பேர் ஆண்கள். ஒருவர் பெண் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். விமானியும் விபத்தில் சிக்கி உயிரிழந்து உள்ளார். மற்றொரு உடல் அடையாளம் காண முடியாதபடி விபத்தில் கருகி இருந்தது. இதில், பயணம் செய்த 4 பேர் சீன நாட்டை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.