LOADING

Type to search

இலங்கை அரசியல்

கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்ற சர்வதேச யானைகள் தினம்

Share

ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி உலகம்பூராகவும் சர்வதேச யானைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தவகையில் எதிர்காலத்திற்கான சுற்றுச் சூழல் கழகமும்,கிளிநொச்சி/ விவேகானந்தா வித்தியாலயமும் இணைந்து சிறந்த முறையில் சர்வதேச யானைகள் தினம் கொண்டாடப்பட்டது.

இவ் விழாவிற்கு யாழ்பல்கலைக்கழக விவசாய பீட முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி சி.சவசங்கர் பிரதம விருந்தினராகவும், சிறப்பு விருந்தினராக எதிர்காலத்திற்கான சுற்றுச் சூழல் கழக செயலாளர் ம.சசிகரன் மற்றும் சுற்றாடல் உத்தியோகத்தர் எஸ்.லதீஸ்குமாரும் கலந்து சிறப்பித்தனர்.

விழாவின்போது பல்வேறு போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவர்களிற்கு சான்றிதழ் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

விழாவின்போது மாணவரின் பல்வேறு கலைநிகழ்வுகழும் இடம்பெற்றது.

இதன்போது மாணவர் மத்தியில் யானைகள் பாதுகாப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.