LOADING

Type to search

இலங்கை அரசியல்

ஜனாதிபதி தேர்தல் அமளிகளுக்கிடையில் இலங்கையில் கடந்த 48 மணித்தியாலயத்தில் வாகன விபத்துக்களில் சிக்கி 6 பேர் உயிரிழக்க ஒருவர் படுகாயம்கு 4 சாரதிகள் கைது

Share

(கனகராசா சரவணன்;)

அம்பாறை காரைதீவு, கிளிநொச்சி, வெயாங்கொடை, கட்டுகஸ்தோட்டை , வவுனியா ஓமந்தை பிரதேசங்களில் கடந்த 24 மணித்தியாலயத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 14 வயது சிறுமி ஒருவர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் 4 பேரை கைது செய்துள்ளதாக அந்தந்த பிரதேச பொலிசார் தெரிவித்தனர்.

அம்பாறை காரைதீவு பொலிஸ் பிரிவிலுள்ள மாவடிப்பள்ளியில் இருந்து சம்மாந்துறை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றுடன் குறுக்கு வீதியில் இருந்து பிரதான வீதிக்கு சென்ற மோட்hர் சைக்கிள் ஒன்டன் 19-09-2024 அன்று வியாழக்கிழமை (19) மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய தந்தை படுகாயமடைந்ததுடன் அவரது 14 வயது மகளான சிறுமி உயிரிந்துள்ளதுடன் படுகாயமடைந்த தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்துடன் பஸ்வண்டி சாரதியை கைது செய்துள்ளனர்.

அதேவேளை கிளிநொச்சியில் கிளிநொச்சியிலிருந்து வட்டக்கச்சி செல்லும் வீதியின் பன்னங்கண்டி பாலத்திற்கு அருகாமையில் 19-09-2024 அன்று அதிகாலை வீதியால் சென்று கொண்டிருந்த இளைஞன் மீது டிப்பர் வாகனம் மோதிய விபத்தில் பன்னங்கண்டி பகுதியைச்சேர்ந்த அந்தோனி அல்பிரட்அனுஷன் என்ற இளைஞன் உயிரிழந்ததுடன் டிப்பர் சாரத்தியை கைது செய்துள்ளதாக கிளிநொச்சி பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிலுள்ள பன்றிக்கெய்தகுளம் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி மோட்டார் சைக்கிளில் சம்பவதினமான 18-09-2024 இரவு பிரயாணித்த மோட்டார் சைக்கிள் ஓமந்தை எhரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் வீதி ஓரத்தில் துவிச்சக்கரவண்டி ஒன்றுடன் நின்றிருந்வர் மீத மோதிய விபத்தில் மோட்டார் பிரயாணித்த ஓமந்தை பகுதியைச் சேலர்ந்த 46 மற்றும் 48 வயதுடைய இருவர் ஒயிரிழந்துள்ளதாக ஓமந்தை பொலிசார் தெரிவித்தனர்.

இதேவேளை வெயாங்கொடை மினுவாங்கொடை பிரதான வீதியில் 20 மையில்கல் பகுதியில் வீதியை குறுக்கறுத்த பெண் ஒருவர் மீது மொட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் படுகாயமடைந்த வத்தகா வெயங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய பெண்ணை மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளார் இதனையடுத்து மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவரை பொலிசார் கைது செய்தனர்

கண்டி-யாழ்ப்பாணம் ஏ-09 வீதியில் கட்டுகஸ்தோட்டை நகரில் பாதசாரி ஒருவர் மீது கார் மோதிய விபத்தில் 71 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து கார்சாரதியை கைது செய்துள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த விபத்து இடம்பெற்ற பிரதேசங்களச் சேர்ந்த பொலிஸ் நிலைய பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.;