LOADING

Type to search

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் | திருமதி. ஜெயதாசன் தங்கேஸ்வரி (சாந்தி)

Share

(புளியங்கூடல் -யாழ்ப்பாணம் (பிறந்த இடம்) – B0mlo, Norway London, United Kingdom)

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், நோர்வே B0mlo ஐ வசிப்பிடமாகவும், தற்போது பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட தங்கேஸ்வரி ஜெயதாசன் அவர்கள் 10-06-2022 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் புளியங்கூடலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம், தனலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், கரம்பனைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சாம்பசிவம், மீனாம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகளும், ஜெயதாசன் (ஜெயம் ) அவர்களின் அன்பு மனைவியும், லக்சிதா , லக்சன், நிவேதிதா ஆகியோரின் அன்புத் தாயாரும், சுதந்திரகரன் (கனடா), விவேகானந்தன (பிரான்ஸ்), ஈஸ்வரி (பிரான்ஸ்), ஞானகரன (ஜேர்மனி), சிறிகரன் (இங்கிலாந்து), ரதி (இலங்கை), இந்திரா (கனடா), ரவி (இங்கிலாந்து), சுதா (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற இராசையா, மற்றும் மங்கை தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற கண்ணதாசன், புனிதவதி, காலஞ்சென்ற செல்வி, புஸ்பவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும், சத்தியலோசனி (யசோ, கனடா), சாந்தி, திருச்செல்வம், ஜெயரஜிதா, பிரேமா, ரஞ்சன், சுதன், சியாமினி, பவன்
ஆகியோரின் மைத்துனியும்,

சேனாதிராஜா, தவராஜா, வேங்குலன் (பாபு) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 09-07-2022 சனிக்கிழமை மாலை 12:00 மணி தொடக்கம் 3:00 மணி வரை Angel Funeral Directors ltd (267 Allerby Rd, Southall UB1 2HB, United Kingdom) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு,

11-07-2022 திங்கட்கிழமை காலை 8:00 மணி தொடக்கம் 11:00 மணி வரை ஈமைக்கிரியைகள் நடைபெற்று, பின்னர் காலை 11:30 மணி தொடக்கம் மாலை 1:00 மணி வரை North East Surrey Crematorium (Cemetery Lodge, Lower Morden Ln, Morden SM4 4NU, United Kingdom) இல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
ஜெயம் – கணவர்: +447521969301
சிறி – சகோதரன்: +447578013488
ரவி – சகோதரன் : +447465838839