LOADING

Type to search

மரண அறிவித்தல்

3ம் ஆண்டு நினைவஞ்சலி | அமரர். திருமதி. டாக்டர் அன்னபூரணம் ஞானசம்பந்தர்

Share

எமை ஈன்றெடுத்த எம் அன்புத் தாயே
உங்கள் இன்முகம் தான் எங்கேயம்மா
இவ்வுலகில் எமை விட்டுப் பிரிந்து
ஆண்டு மூன்று ஆனதே அம்மா

பாசத்தை நமக்கு ஊட்டி வளர்த்த
பண்பான எம் அன்னையே
கண்ணின் இமையானீர் அன்று
எம் கண்ணீரின் கதையானீர் இன்று

எங்கள் பாச ஒளிவிளக்கே
மூன்று ஆண்டு மறைந்தாலும் உங்கள் முகம்
எம் நெஞ்சை விட்டு என்றும் அகலாது அம்மா
தெய்வமே எமை விட்டு சென்றதெங்கே

ஏங்கித் தவிக்கின்றோம், ஏமாந்து போகின்றோம்
மீண்டும் ஓர் பிறப்புண்டேல்
உமக்கே பிள்ளைகளாய் பிறப்போம் அம்மா
வாரும் அம்மா ஒரு முறையேனும் எங்களிடம்….

அன்னையின் ஆத்மா சாந்தியடைய வேண்டி நிற்கின்றோம்.

ஓம்சாந்தி! ஓம்சாந்தி! ஓம்சாந்தி!

தகவல்: பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

தொடர்புகளுக்கு:
சந்திரகுமார் (மகன்) – 1(613) 266-0411
சுமதி (மகள்) – (416) 627-7202