LOADING

Type to search

மரண அறிவித்தல்

வருடம் ஒன்று ஆனதையா உங்கள் வண்ண முகம் மறைந்து! | அமரர். சர்வேந்திரராஜா சின்னராசா

Share

பெருங்குடியின் தனியொருவனே!
தற்பெருமையில்லா ராஜாவே!
ஓராண்டாய் இங்கு நாம் கதறுகின்றோம்
ஏன் என்று ஏன் அப்பா கேட்கவில்லை!
தீராத எங்களின் அழுகுரல் இன்னும்
உங்கள் செவிவந்து சேரவில்லையோ?

தலைவன் இல்லாத இல்லம் தத்தளிக்கின்றது – உங்கள்
மனைவி, மகள் வதனம் மலரமறுக்கின்றது
உன் உறவுகள் உன் முகம் தேடுகின்றன
உன் நிழலின்றி நண்பர்குழாம் வாடுகின்றன

சந்திக்கும் வாய்ப்பு இனி இல்லையப்பா!
எங்கள் இதயத்தில் என்றும் இணைந்திருப்பாய்!
தோன்றாத் துணையாய் நீ இருந்து
எங்களை வழிகாட்டிடுவாய்!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

இங்ஙனம்,
தங்களை இழந்து தவிக்கும் துணைவி, புதல்வி மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள்.