LOADING

Type to search

கனடா அரசியல்

‘மொன்றியால் வீணைமைந்தன்’ அவர்களின் மணி விழா ஆகஸ்ட் 7ம் திகதி நல்லூர் நாவலர் மணி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

Share

கனடா வாழ் எழுத்தாளரும், பேச்சாளரும் கனடா ‘உதயன்’ தொடர் எழுத்தாளரும். கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் நிறுவுனர்களில் ஒருவருமான ‘மொன்றியால் வீணைமைந்தன்’ அவர்களின் மணி விழா ( 75வது அகவை பூர்த்தி விழா ) எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 7ம் திகதி நல்லூரில் அமைந்துள்ள நாவலர் மணி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

யாழ் இலக்கிய வட்டத்தின் தலைவரும் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்களில் ஒருவருமான பேராசிரியர் என். சண்முகலிங்கன் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ள இந்த விழாவில் யாழ்ப்பாணத்தில் கல்வி. கலை இலக்கியம் மற்றும் பொதுச்சேவை ஆகியவற்றில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வரும் பலர் வாழ்த்துரையாற்றவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

வாழ்த்துக்களுடன் தகவல் தருவது- கனடா உதயன் ஆசிரிய பீடம்