LOADING

Type to search

கனடா அரசியல்

காணாமல் செய்யப்பட்ட உறவுகளை தேடும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஒன்ராறியோ பாராளுமன்ற முன்றலில் கவனயீர்ப்பு

Share

ஆகஸ்ட் 30 சர்வதேச காணமல் ஆக்கப்பட்டோர் தினமாகும். தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார், தந்தைமார், பிள்ளைகள் தொடர்ந்து 2000 நாட்களுக்கு மேலாக தாங்கள் ஒப்படைத்த , காணாமல் செய்யப்பட்ட உறவுகளை தேடி சர்வதேசத்திடம் நீதி வேண்டி போராடி வருகிறார்கள்.

இவர்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமுகமாக கனடாவில் ஒன்ராறியோ பாராளுமன்ற முன்றலில் 30/08/2022 மதியம் 12.30 – பிற்பகல் 3.00 வரையும். பிற்பகல் 4.00 மணி – இரவு 8.00 மணிவரை மார்கம் அன் இஸ் ரீல் சந்திப்பிலும் கவனயீர்ப்பு நடைபெறும். அனைத்து தமிழ் உறவுகளும் நீதிக்காக அணிதிரளுமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

மேலதிக தொடர்புகளுக்கு
மகாஜெயமா
6472625587