LOADING

Type to search

கனடா அரசியல்

மறைந்தும் மறையாத பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியத்தின் ஓராண்டு நிறைவு நினைவாக கனடா ரிஎம்எஸ் தெய்வேந்திரம் நடத்திய ‘பயணங்கள் முடிவதில்லை’ இசை விழா

Share

மறைந்தும் மறையாத திரைத்துறைப் பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியத்தின் இனிய பாடல்களை கேட்டு மகிழ உலகெங்கும் அவரது ரசிகர்கள் என்றும் ஆவலாகவே உள்ளார்கள்.
அந்த வரிசையில் கனடாவில் உள்ள எஸ்.பி.பி ரசிகர்களுக்காக அவரது ஓராண்டு நிறைவு நினைவாக கனடா ரிஎம்எஸ் தெய்வேந்திரம் நடத்திய ‘பயணங்கள் முடிவதில்லை’ இசை விழா கடந்த 24-09-2022 அன்று சனிக்கிழமையன்று மார்க்கம் நகரில் உள்ள உயர் பாடசாலை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது

ரிஎம்எஸ். தெய்வேந்திரம் அவர்களின் ‘இராஜகீதம்’ குழுவின் ஆதரவில் இசைக்குழுவினர் பின்னணி இசை வழங்க கனடா வாழ் பல புகழ்பெற்ற பாடக பாடகிகள் பங்கெடுக்க. அமெரிக்காவிலிருந்து விசேடமாக அழைக்கப்பெற்ற பாடகர் சுரேஸ் அவர்கள் அன்று மேடையில் அமரர் எஸ்.பி. பி அவர்களையே மேடையில் கொண்டு வந்து நிறுத்தினார்.

மரர் எஸ்.பி. பி அவர்களையே
அமரர் எஸ்.பி. பி அவர்களே மீண்டும் உயிர் பெற்று வந்து விட்டாரா என்று வியக்கும் அளவிற்கு அன்றைய பாடல்களை இனிதாகவும் ரசிகர்கள் வியக்கும் வண்ணமும் பாடினார் அமெரிக்காவிலிருந்து விசேடமாக அழைக்கப்பெற்ற பாடகர் சுரேஸ் அவர்கள்
நீண்ட நாட்களின் பின்னர் நல்லதோர் மெல்லிசை நிகழ்ச்சியை கண்டும் கேட்டும் ரசித்த மகிழ்ச்சியோடு சபையோர் வீடு திரும்பினர்..

பிரபல அறிவிப்பாளர் ரமணன் நிகழ்ச்சிகளை அழகாகத் தொகுத்து வழங்கினார்
இங்கே காணப்படும் படங்கள் அங்கு எடுக்கப்பெற்றவையாகும்.

சத்தியன்