LOADING

Type to search

இலங்கை அரசியல்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி கைது!

Share

மன்னார் நிருபர் எஸ்.றொசேரியன் லெம்பேட்

தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா வவுனியா பொலிஸாரால் நேற்று (09-03-2023) கைது செய்யப்பட்டார்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உண்மை நிலையை வலியுறுத்துமாறு கோரி அவர்கள் போராட்டம் மேற்கொண்டு வரும் கொட்டகைக்கு சட்டவிரோதமாக மின்சாரத்தினை பெற்றனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த குறித்த சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார்….

நாம் கடந்த 2210 நாட்களாக குறித்த கொட்டகையிலேயே போராடி வருகிறோம்.

அந்த கொட்டகை பகுதியில் இருந்த மின்சார தூணில் இருந்து வீதி மின்விளக்கு ஒன்று பொருத்தப்பட்டிருந்தது.

அதிலிருந்து எமக்கான மின்சாரம் மின்சார சபையால் வழங்கப்பட்டிருந்தது.

வடமாகாணசபை செயல்பாட்டில் இருக்கும் போது அது வழங்கப்பட்டிருந்தது.

அதில் பழுதுகள் ஏற்பட்டபோதும் கூட இலங்கை மின்சார சபையினை சேர்ந்தவர்கள் வருகை தந்து அதனை சீரமைத்தும் தந்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது கைது செய்துள்ளமை யை ஏற்றுக்கொள்ள முடியாது.

நாம் சட்டவிரோதமாக மின்சாரம் பெறவில்லை.

எமது போராட்டத்தை திசை திருப்புவதற்காக வே இவ்வாறான சட்டங்கள் பிரயோகிக்கப்படுகின்றது. என்றார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரசார துண்டு பிரசுரத்தில் தனது மகள் உள்ளதாக கூறிய பெண்ணான காசிப்பிள்ளை ஜெயவனிதா வே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.