LOADING

Type to search

கனடா அரசியல்

ஈற்றோபிக்கோ நகரில் இயங்கிவரும் ‘கிராமத்து வதனம்’ அமைப்பினரால் கொண்டாடப்பெற்ற ‘உலக மகளிர் தினம்;-2023

Share

எழுத்தாளரும் தமிழாசிரியையுமான திருமதி கமலவதனாவின் தலைமையில் ஈற்றோபிக்கோ நகரில் இயங்கிவரும் ‘கிராமத்து வதனம்’ அமைப்பினரால் கொண்டாடப்பெற்ற ‘உலக மகளிர் தினம்;-2023 கடந்த 19-03-2023 ஞாயிற்றுக்கிழமையன்று பிற்பகல் ஈற்றோபிக்கோ நகரில் அமைந்தள்ள சனசமூக நிலைய மண்டபத்தில் சிறப்பக நடைபெற்றது.

பிரதம விருந்தினராக பேராசிரியர் இளையதம்பி பாலசுந்தரம் அவர்கள் அழைக்கப்பெற்றிருந்தார்.

சிறப்பு விருந்தினராக முன்னாள் தமிழ் மூத்தோர் சங்கத்தின் தலைவரும் சமூக சேவையாளருமான கரு நவரட்ணராஜா அவர்கள் அழைக்கப்பெற்றிருந்தார். நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் பணியையும் அங்கு இடம்பெற்ற பட்டிமன்ற நிகழ்ச்சிக்கு நடுவராகப் பணியாற்றியும் சிறப்பாக செய்திருந்தார் பேச்சாளரும். எழுத்தாளரும் வானொலிக் கலைஞருமான ஜொதி ஜெயக்குமார் அவர்கள்.

நடனங்கள் உரைகள் என பல கிராமிய நிகழ்ச்சிகள் அங்கு இடம்பெற்றிருந்தன.
பட்டிமன்றம் மற்றும் நடன நிகழ்ச்சிகளில் பங்கு பற்றியவர்களை பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்கள் தனது துணைவியார் சகிதம் கௌரவித்தார்.

சிறப்பு விருந்தினர் கரு நவரட்ணராஜா அவர்கள் தலைவி கமலவதனா அவர்களை பாராளுமன்றம் சார்பான சான்றிதழ் வழங்கிக் கௌரவித்தார்.