LOADING

Type to search

இலங்கை அரசியல்

கிளிநொச்சியில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்.

Share

(28-06-2023)

கிளிநொச்சி உதய நகரில் இன்று புதன் காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காரில் பயணித்த குழுவினர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

38 வயதுடைய கார் சாரதி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கனகபுரம் பகுதிக்கு காரில் பயணித்த பெண்ணுக்கும் மேலும் இரு நபர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஏற்பட்ட பழிவாங்கல் காரணமாகவே இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.