LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் 66 ஆவது பேராளர் மாநாடு

Share

பு.கஜிந்தன்

“தரமான கல்வியை உறுதி செய்து உரிமைகளை வென்றெடுப்போம்” எனும் தொனிப் பொருளில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் 66 ஆவது பேராளர் மாநாடு யாழில் இன்று நடைபெற்றது.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று காலை மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய இந்த மாநாடு பெருமளவிலான அதிபர் ஆசிரியர்களின் பங்குபற்றலுடன் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

இந்த மாநாட்டில் மதத் தலைவர்கள் ஆசிரியர் சங்க தலைவர் செயலாளர் உள்ளிட்ட சங்கத்தின் பிரதிநிதிகள் உறுப்பினர்கள் எனப் பலரும் நாடு முழுவதிலும் இருந்து வந்து கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ
உபதலைவர்
ரசிக்கா அததாங்கொட இலங்கை அரசியல் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் இலங்கை நிறுவனத்தைந்து மாவட்டங்களின் சேர்ந்த ஆசிரியர்களும் கலந்து கொண்டிருந்தனர் இதன்போது நீண்ட காலமாக ஆசிரியர் சங்கத்திலிருந்து சேவையாற்றிய ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

ஆசிரியர் சங்கத்தின் பிரகடனமும் இதன்போது வெளியிடப்பட்டது.