LOADING

Type to search

இலங்கை அரசியல்

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் – ஆட்சியர்

Share

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு மாவட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் 34 பணியிடம், பட்டதாரி ஆசிரியர் 10 பணியிடம் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் 10 பணியிடம் என மொத்தம் 54 பணியிடங்கள் தொகுப்பூதியத்தில் நிரப்ப படவுள்ளது.

செங்கல்பட்டு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் மற்றும் செங்கல்பட்டு, மதுராந்தகம் ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் அலுவலகங்களின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. தொகுப்பூதிய முறையில் மேற்கண்ட காலிப்பணியிடங்களை பள்ளி மேலாண்மைக்குழு மூலம் முற்றிலும் தொகுப்பூதிய முறையில் தற்காலிகமாகவும், நிபந்தனை அடிப்படையிலும் நிரப்பப்பட உள்ளது.

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான கல்வி தகுதி: ஆசிரியர்களுக்கான தற்போதைய அரசு நடைமுறையில் உள்ள வரையறுக்கப்பட்ட கல்வித்தகுதிகளுடன், ஆசிரியர் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் பட்டியலினத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தன்னார்வலராக பணி புரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பள்ளி அமைந்துள்ள அந்தந்த பகுதிகளில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலருக்கு வருகிற 13-ந்தேதி மாலை 5.45 க்குள் ஒப்படைக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.