LOADING

Type to search

இலங்கை அரசியல்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை துரத்துவோம் – மன்னாரில் சுவரொட்டிகள்.

Share

(மன்னார் நிருபர்)

(20-09-2023)

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஊர்தி பவனி வடக்கு கிழக்கில் மக்களின் நினைவேந்தலுக்கு சென்று வரும் நிலையில் ஊர்தி பவணி இவ்வாரம் மன்னாரை நோக்கி வருகை தரவுள்ள நிலையில் குறித்த நினைவேந்தல் பவனிக்கு இடையூறு விளைவிக்கும் விதமாகவும் ஊர்தி பவணியை குழப்பும் விதமாகவும் மன்னாரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

-இன்றைய தினம் புதன்கிழமை(20) அதிகாலை மன்னார் மாவட்டத்தின் பல பாகங்களில் பரவலாக குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

தேசப்பற்றுள்ள மக்கள் இயக்கம் என்ற பெயரில் மன்னார் பொது மைதானம்,மன்னார் சதோச மனித புதைகுழி வளாகம்,மன்னார் ரெலிகோமுக்கு அருகாமை உட்பட சில பகுதிகளில் குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

குறித்த சுவரொட்டியில்

தமிழ் ஈழத்திற்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் தியாகம் செய்த மாவீரன் திலீபனின் தியாகத்தை விற்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யை துரத்துவோம் .என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சுவரொட்டிகள் தேசப்பற்றுள்ள மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள போதிலும் இதுவரை குறித்த பெயரில் எந்த இயக்கமும் மன்னார் மாவட்டத்தில் செயற்படுவதாக அறியப்படவில்லை

எனவும் குறித்த சுவரொட்டிகளை மன்னார் மாவட்டத்தில் இயங்கி வரும் புலனாய்வாளர்கள் அல்லது அரசாங்கத்துடன்,முப்படையினறோடோ இணைந்து செயல்படும் பிரிவினரே ஒட்டியிருக்கலாம் எனவும் இதை அடிப்படையாக வைத்து மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் மன்னார் பொலிஸார் தியாக தீபன் திலீபன் நினைவஞ்சலிக்கு ஊர்தி பயணிக்கும் தடை கோரும் வகையில் இவ் சுவரொட்டி நாடகம் இடம் பெறலாம் என மக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.