LOADING

Type to search

இலங்கை அரசியல்

தீவகத்தில் தியாக தீபத்தின் நினைவேந்தல்!

Share

பு.கஜிந்தன்

தியாகி திலீபனின் 36 ஆவது நினைவேந்தல் நிகழ்வின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் தீவக நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் – வேலணை வங்களாவடிச் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் நடைபெற்றன.

இதன்போது தியாக தீபம் திலீபனுக்கு பொதுச்சடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டு பொதுமக்களால் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

திலீபன் நினைவாக அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு தென்னங்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.