LOADING

Type to search

இலங்கை அரசியல்

வட்டுக்கோட்டை இளைஞன் குறித்து பக்கச் சார்பற்ற விசாரணை வேண்டும் என இலங்கைக்கான சுவிஸ் தூதுவர் அழுத்தம்

Share

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இளைஞன் உயிரிழந்த சம்பவம் குறித்து இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் சிறிவொல்ட் கவலை வெளியிட்டுள்ளார்.

அவரது X தளத்தில் இடப்பட்ட பதிவொன்றிலேயே அவர் இவ்வாறு கவலை தெரிவித்துள்ளார்.

மேலும் தனது பதிவில், பொலிஸாரினால் தடுத்துவைக்கப்பட்டிருந்த வேளை இளைஞன் உயிரிழந்தமை குறித்து ஆழ்ந்த கவலையடைகின்றேன் என சிறிவொல்ட் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து இலங்கை அதிகாரிகள் பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.