LOADING

Type to search

இலங்கை அரசியல்

72 வயது சாதனைப் பெண் திருமதி : அகிலத்திருநாயகி அவர்கள் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தால் பாராட்டி கௌரவிப்பு

Share

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் முல்லைத்தீவு – முள்ளியவளையைச் சேர்ந்த 72 வயதுடைய திருமதி. அகிலத்திருநாயகி அவர்கள் 1500 மீட்டர் ஓட்டப்போட்டி மற்றும், 5000 மீட்டர் விரைவு நடைப்போட்டி ஆகியவற்றில் 2 தங்கப் பதக்கங்களையும் 800 மீட்டர் ஓட்டபோட்டி ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்று இலங்கைக்கும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தந்தார்.

இவரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு 24-11-2023 வெள்ளிக்கிழமை முல்லைத்தீவு மாவட்டச் செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் . அகிலத்திருநாயகி அவர்களது சாதனைகள் தொடர்பாக வாழ்த்துரைகள் இடம் பெற்றதுடன் நினைவுச் சின்னம் மற்றும் பணமுடிப்பு வழங்கியும் பொன்னாடை மாலை அணிவித்தும் திருமதி. அகிலத்திருநாயகி கௌரவிக்கப்பட்டார்

குறித்த நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(நிர்வாகம்) திரு.எஸ்.குணபாலன்,  பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் திரு. லிங்கேஸ்வரன் , பிரதம கணக்காளர் திரு.ம. செல்வரட்ணம், சமுர்த்தி பணிப்பாளர் M.முபாரக், மாவட்ட பதில் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி க.ஜெயபவானி , பதவிநிலை உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர் திரு.சண்முகலிங்கம் திருமதி. அகிலத்திருநாயகி அவர்களது ஆசிரியர் திருமதி.ஐயம்பிள்ளை என பலரும் கலந்துகொண்டனர்.