வாகரை மாவீரர் துயிலும் இல்ல மாவீரர் நினைவு கல்வெட்டுகள் கொங்கிறீற் தூண்கள் அடித்து உடைப்பு கொடிகள் அறுத்து எறிவு
Share
மன்னார் நிருபர்
(25-11-2023)
மட்டக்களப்பு வாகரையில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர்களின் நினைவு கல் வெட்டுக்களையும் கம்பி வேலி அமைக்கப்பட்ட கொங்கிறீற் தூண்களை இனந்தெரியாதோரால் அடித்து உடைத்தது டன் சோடிக்கப்பட்ட கொடிகளை அறுத்து எறிந்து உள்ள சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (24) இரவு இடம்பெற்றுள்ளது.
எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர் நினை வேந்தலை யிட்டு வாகரையில் உள்ள கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் ஏற்பாட்டுக் குழுவினர் துப்புரவு பணிகளை மேற்கொண்டு அங்கு காணியை சுற்றி அமைக்கப்பட்ட கம்பி வேலி அமைக்கப்பட்ட கொங்கிறீற் தூண்களுக்கு மஞ்சள் சிவப்பு வர்ணம் தீட்டி கொடிகளை கட்டி சோடனை செய்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்றைய தினம் இரவு மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலி அமைக்கப்பட்ட கொங்கிறீற் தூண்கள் மற்றும் மாவீரர் நினைவு கல்வெட்டுக்களை இனம் தெரியாத குழு ஒன்று அடித்து உடைத்தது டன் கொடிகளை அறுத்தெறிந்து சேதத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் விசனம் தெரிவித்துள்ளனர்.