LOADING

Type to search

கனடா அரசியல்

கனடா வோட்டர்லூ பிராந்தியத்தில் உதயமாகும் முருகன் இந்து கோவில்

Share

கனடா- வோட்டர்லூ பிராந்தியத்தில் 80களில் குடியேறிய இலங்கை, இந்திய தமிழ்ப் பூர்வீக மக்களின் சிந்தனையின் ஒரு பகுதியாக இந்துக் கோயிலை இப்பகுதியில் நிறுவுவதை நோக்கமாக் கொண்டிருந்தது . இப்போது இலாப நோக்கற்ற அமைப்பாகப் பதிவுசெய்யப்பட்ட கோயில், முருகன், விநாயகர், சிவன், துர்க்கை, வெங்கடேஸ்வரா போன்ற தெய்வங்களை உள்ளடங்க முருகன் கோவில் ஆரம்பிக்கப்பட உள்ளது.

கோவில் திட்டத்தில் அர்ப்பணிப்புள்ள குழு கடந்த எட்டு மாதங்களாக விடாமுயற்சியுடன் செயல்பட்டு வருகிறது. கோயில் நிர்வாகக் குழு, தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் ஒருங்கிணைப்புடன் நிதி திரட்டும் முயற்சி முக்கியமான ஒரு நீண்ட காலத் திட்டமாக கருதுகின்றார்கள். சமூகத்தின் உற்சாகத்தையும் ஆதரவையும் பிரதிபலிக்கும் வகையில் ஆதரவுகள் ஏற்கனவே குவியத் தொடங்கியுள்ளன.

இலங்கைத் தமிழர்கள் தென்னிந்திய தமிழர்கள் , மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி பேசும் சமூகத்தினருக்கு இக்கோயில் சேவை செய்யும் ஒரு பெரிய வரப்பிரசாதமாக அமையவுள்ளது. ஒன்றுபட்ட குடும்பத்தை உருவாக்குவது, மதப் பழக்கவழக்கங்கள் மற்றும் வளமான பாரம்பரிய கலாச்சாரத்தின் கொண்டாட்டங்களுக்கான புகலிடமாக உருவாக்குவதே இந்த நோக்கம் .

இலங்கையின் யாழ்ப்பாணத்தில் உள்ள கோவில்களில் ஈடுபட்டுள்ள பெறுமதியான அனுபவமும் அறிவும் இத்திட்டத்தை முன்னெடுக்க உதவியாக உள்ளது. ஒரு இடத்தை வாடகைக்கு எடுப்பதற்கும், சிலைகளை வாங்குவதற்கும் நிதியைப் பெறுவதே உடனடி இலக்காகும், அடுத்த ஆண்டு ஒரு இடத்தை வாடகைக்கு எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கோவில் திட்டத்தின் தொடக்க விழா எதிர்வரும் தைப்பூச தினமான ஜனவரி 26, 2024 வெள்ளிக்கிழமை அன்று கிச்சனரில் உள்ள Doon Pioneer Community Center ல் மங்களகரமான தை பூசத் திருவிழா அன்று ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ பாஞ்சாட்சர விஜயகுமார் அவர்களின் தலைமையில் மாபெரும் பூஜை விழாவுடன் இடம்பெறவுள்ளது.

தொடக்க விழாவைத் தொடர்ந்து கலாச்சார நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகள், பங்கேற்பாளர்களுக்கு கலாச்சார அனுபவத்தை மேலும் மேம்படுத்தும். ஒரு அன்னதானம், அல்லது சமூக விருந்து, நிகழ்வை நிறைவு செய்யும், கொண்டாட்டத்திலும் ஒற்றுமையிலும் மக்களை ஒன்றிணைக்கும். பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் இது வரப்பிரசாதமாக அமையவுள்ளது..

வோட்டர்லூ பிராந்தியத்தில் உள்ள இலங்கை தமிழ் சமூகங்கள் மற்றும் தென்னிந்திய சமூகத்தினர் இந்த முருகன் ஆலயத்தின் சமூகம், கலாச்சாரம் மற்றும் இந்த கோவில் திட்டம் என்பன ஒரு சான்றாக அமையும் .