பிரதமர் மோடியை வரவேற்க பா.ஜ.க. நிர்வாகிகள் கன்னியாகுமரி வர தடை
Share
கன்னியாகுமரி வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்க தமிழக பாரதிய ஜனதா கட்சியினர் பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்தனர். மத்திய அமைச்சர் எல்.முருகன், மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் முக்கிய பிரமுகர்களுக்காக கன்னியாகுமரி விடுதிகளில் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் அதை கட்சியினர் ரத்து செய்துள்ளனர். இது பற்றி கேட்ட போது, பிரதமரின் தனிப்பட்ட தியான நிகழ்வை அரசியல் கட்சி நிகழ்வாக மாற்றக் கூடாது. கன்னியாகுமரிக்கு வரும் பிரதமர் மோடியை வரவேற்க கட்சி நிர்வாகிகள் யாரும் வர வேண்டாம் என்று தமிழக பா.ஜ.க.வினருக்கு டில்லி தலைமை உத்தரவிட்டதாக தெரியவந்துள்ளது. அதன் பேரிலேயே விடுதியில் முன்பதிவு செய்திருந்த அறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.