LOADING

Type to search

இலங்கை அரசியல்

வட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ள அராலி என்னும் கிராமத்தில் இளம் பெண் தூக்கிட்டு உயிர்மாய்ப்பு!

Share

இன்றையதினம் அராலி வடக்கு பகுதியில் இளம் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். அதே பகுதியை சேர்ந்த 24 வயதுடைய சிவகரன் மயூரா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணின் தந்தையும், அண்ணாவும் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அவர் இன்று இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.

சடலம் மீதான பிரேத பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.