LOADING

Type to search

இலங்கை அரசியல்

காத்தான்குடியில் வீடு ஒன்றின் மீது இடம்பெற்ற குண்டு வெடிப்பு தயாரிக்கப்பட்ட புதுவகையான குண்டு இது பரீட்சித்து பார்பதற்காகவா? என பல கோணங்களில் விசாரணை

Share

((கனகராசா சரவணன்)

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பூநொச்சிமுனை பகுதியில் வீடு ஒன்றின் மீது திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற குண்டு தாக்குதலில் பாவிக்கப்பட்ட குண்டு தயாரிக்கப்பட்ட குண்டு எனவும் அது எவ்வாறான குண்டு வகை என தெரியாதது எனவும் இது புதுவகையானது எனவும் இது பரீட்சித்து பார்பதற்காக? என பல கோணங்களில் பொலிசார் மற்றும் இராணுவத்தினர் விசேட அதிரடிப்படையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பூநொச்சிமுனை முகைதீன் ஜூம்ஆஹ பள்ளி வீதியில் உள்ள வீடு ஒன்றின் கூரை மீது சம்பவதினமான திங்கட்கிழமை இரவு 8.30 மணிக்கு பாரிய சத்தத்துடன் குண்டு வெடித்து தீ பிளம்பு வெளியேறியதையடுத்து வீட்டின் அறைப் பகுதியிலுள்;ள இரு ஓடுகள் உடைந்து கீழே வீழ்ந்துள்ளது ஆனால் வீட்டில் இருந்த எவருக்கும் எதுவிதமான பாதிப்பும் ஏற்படாத நிலையில குண்டு வெடிப்பின் போது ஏற்பட்ட புகை மனத்தினால் பெண் ஒருவர் வாந்தி எடுத்துள்ளதையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் இராணுவத்தினர் விசேட அதிரடிப்படையின் விசாரணைகளை மேற்கொண்டனர். இருந்தபோதும் குண்டுதாக்குதலுக்கான எதுவிதமான தடயங்களும் இல்லாத நிலையில் இது குண்டுதாக்குதால? என கண்டறிய முடியாது குழப்பமடைந்தனர்.

இந்த நிலலையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) தடவியல் பிரிவு பொலிசார் வரவழைக்கப்பட்டு அவர்கள் மேற்கொண்ட சோதனையடிப்படையின் குறித்த வீட்டின் பின்பகுதியிலுள்ள அறை பகுதியை கொண்ட கூரை மீது இந்த குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் அந்த குண்டில் இருந்து வெளிவந்த சிறிய ரக சன்னங்கள் வியில் அடைக்கப்பட்ட தகரங்களை துளைத்துக் கொண்டு போயுள்ளதை கண்டு பிடித்தனர்

இதனை தொடர்ந்து வெடித்த குண்டில் இருந்து வெளியேறிய சிறிய ரக சன்னங்களை கண்டுபிடித்தது மீட்டதுடன் குண்டை யாரே வீட்டின் பின்பகுதி வீதிவழியாக சென்று வீட்டின் மீது வீசி தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாகவும் இது தயாரிக்கப்பட்ட குண்டாக இருக்கலாம் எனவும்.

இந்த குண்டை முதல் முதல் பார்ப்பதாகவும் இது புது வகையான தயாரிப்பாக இருக்கலாம் எனவும் இது எவ்வாறான தயாரிப்பு என கண்டறியப்படவில்லை எனவும்; தயாரிக்கப்பட்ட குண்டை பரீட்சித்துப் பார்ப்பதற்காகவா? யார் செய்தனர்?, ஏன்? எதற்காக? செய்தனர் என பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடு க்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.