LOADING

Type to search

உலக அரசியல்

20 மருத்துவ மாணவர்கள் துப்பாக்கி முனையில் கடத்தல்

Share

நைஜீரியா நாட்டின் மைடுகுரி மற்றும் ஜோஸ் நகரங்களை சேர்ந்த மருத்துவ பல்கலைக்கழக மாணவர்கள் 20 பேர் நேற்று அந்நாட்டின் பினியூ நகரில் நடைபெற்ற மருத்துவ மாணவர்களுக்கான கருத்தரங்கில் பங்கேற்க பேருந்தில் சென்றனர். பினியூ நகரின் ஒடுக்பு என்ற பகுதியில் உள்ள சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென துப்பாக்கி ஏந்திய கும்பல் திடீரென பேருந்தை இடைமறித்தது. மேலும், பேருந்தில் இருந்த 20 மாணவர்களை அந்த கும்பல் துப்பாக்கி முனையில் கடத்தி சென்றது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த பாதுகாப்புப்படையினர் கடத்தப்பட்ட மாணவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். நைஜீரியாவில் பல்வேறு கடத்தல் கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரை இக்கும்பல்கள் கடத்தி பணம் கேட்டு மிரட்டும் சம்பவங்கள் அதிக அளவில் அரங்கேறி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.