LOADING

Type to search

உலக அரசியல்

இந்திய மருத்துவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை

Share

ஆந்திரா மாநிலம், திருப்பதி மாவட்டத்தை சேர்ந்தவர் மருத்துவர் ரமேஷ் பாபு பெரம்செட்டி. குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியேறிய ரமேஷ் பாபு பெரம்செட்டி. அமெரிக்காவின் அலபமா மாகாணத்தில் மிகவும் பிரபலமான மருத்துவர்களில் ஒருவராக இருந்தார். அவசர சிகிச்சை மற்றும் குடும்ப மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற இவர், மருத்துவ சிகிச்சையில் 38 வருட அனுபவம் கொண்டவர் ஆவார். பல்வேறு நலத்திட்டங்களையும் செய்து வந்த இவர், அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். டஸ்கலூசா நகரில், இந்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. மருத்துவர் கொலைக்கான காரணம் குறித்து அங்குள்ள காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளனர். கொரோனா காலத்தில் உள்ளூர் மக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவை அளித்து பலரது உயிரை காப்பாற்றி சேவை செய்துள்ளார். இதற்காக ஏராளமான விருதுகளும் அவர் பெற்றுள்ளார்.