LOADING

Type to search

உலக அரசியல்

ஜெர்மனி: பேருந்தில் கத்தியால் பயணிகளை தாக்கிய பெண் கைது

Share

ஜெர்மனி நாட்டின் வடக்கு ரைன்-வெஸ்ட்பேலியா என்ற நகரில் சீகன் என்ற இடத்தில் பேருந்து ஒன்று 40 பயணிகளுடன் நேற்று மாலை சென்று கொண்டிருந்தது.

அப்போது, பேருந்தில் இருந்த பெண் ஒருவர் திடீரென எழுந்து சக பயணிகளை கத்தியால் தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தில் 5 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்களில் 3 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து மற்ற பயணிகள் சேர்ந்து அந்த பெண்ணை பிடித்தனர். முதல்கட்ட விசாரணையில், அந்த பெண் ஜெர்மனியை சேர்ந்தவர் என நம்பப்படுகிறது. அவர் போதை பொருள் பயன்பாட்டால் பாதிக்கப்பட்ட நபராக இருப்பதற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன என கூறப்படுகிறது. இந்த தாக்குதலில், பயங்கரவாத நோக்கம் எதுவும் இல்லை என்று காவல்துறை தெரிவித்தனர். அந்த பெண் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.