தங்கை முறையுள்ள பெண்ணை காதலித்த அண்ணனை வெட்டிக்கொன்ற தந்தை
Share
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே உள்ள குன்னுவரன்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் கபிலன் (வயது 24). இவர் சென்னை துறைமுகத்தில் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 46) என்பவரின் மகளை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், அண்ணன்-தங்கை உறவு என்பதால் கபிலன் காதலித்த பெண்ணை மணிகண்டன் கண்டித்துள்ளார். இருப்பினும், கபிலன் தனது காதலை கைவிட மறுத்துள்ளார். இதையடுத்து காதலி வீட்டை பார்க்க சென்ற கபிலனுக்கும், காதலியின் தந்தை மணிகண்டனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் அருகில் இருந்த அரிவாளை எடுத்து கபிலனை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த கபிலனை மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கபிலன் உயிரிழந்தார்.
புகாரின் பேரில் விருவீடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய இருவரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.