LOADING

Type to search

சினிமா

‘வேட்டையன்’ படத்தில் ‘ஸ்வேதா’ கதாபாத்திரத்தில் அபிராமி

Share

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது தனது 170-வது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். அமிதாப் பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சமீபத்தில், இப்படத்தின் முதல் வரியான ‘மனசிலாயோ’ பாடல் வெளியாகி வைரலானது. இந்த பாடலில் மறைந்த பிரபல பின்னணி பாடகரான மலேசியா வாசுதேவன் குரலை ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தியுள்ளார் இசையமைப்பாளர் அனிருத். இப்படத்தில் நடித்த நடிகர்களின் கதாபாத்திர அறிமுக பதாகைகள் அடுத்தடுத்து வெளியாகும் என படக்குழு தெரிவித்தது. அதன்படி, ரித்திகா சிங், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, நடிகர் பகத் பாசில், அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரின் கதாபாத்திர அறிமுக பதாகைகளை வெளியிட்டது. முதல் பாடலைத் தொடர்ந்து இந்த படத்தின் அடுத்த பாடலான “ஹண்டர் வண்டார்” நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது. இதுதவிர படத்தில் நடித்துள்ள கதாப்பாத்திரங்களை அறிமுகம் செய்யும் வகையில் படக்குழு காணொளிகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் வேட்டையன் படத்தில் நடிகை அபிராமி ‘சுவேதா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என படக்குழு காணொளி வெளியிட்டு தெரிவித்து உள்ளது.