LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் தியாக தீபம் திலீபன் அவர்களுக்கான நினைவேந்தல் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!

Share

பு.கஜிந்தன்

26-09-2024 அன்றையதினம் தியாக தீபம் திலீபன் அவர்களது நினைவேந்தல், யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இதன் போது தியாக தீபத்தின் திருவுருவப் படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.