LOADING

Type to search

உலக அரசியல்

அமெரிக்காவில் பனிப்புயலால் 100 பேர் உயிரிழப்பு

Share

பனிப்புயலால் அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100ஐ நெருங்கி உள்ளது. அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியை தாக்கிய சக்திவாய்ந்த பனி புயல் காரணமாக வட மற்றும் தென் கரோலினா மாகாணங்கள் மற்றும் ஜார்ஜியா மாகாணங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. மலைபோல் குவியல் குவியலாக குவிந்து வரும் பனி குவியல்களால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். சுமார் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் வரலாறு காணாத பனிப்பொழிவு ஏற்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில், அமெரிக்காவில் பனிப்புயல் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் 100ஐ நெருங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.