LOADING

Type to search

இலங்கை அரசியல்

கடமை ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரிக்கு கௌரவிப்பு நிகழ்வு

Share

கிளிநொச்சி மாவட்டத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றி கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதி பொலிஸ் அத்தியட்சகர் குணரத்ன அவர்கள் கடமை புரிந்துள்ளார்.

இவர் பொலிஸ் சேவையில் இணைந்து 38 வருடங்களாக தன்னை முழுமையாக நாட்டு மக்களின் பாதுகாப்பு கடமையில் இணைத்துள்ளமையும் பல குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கும் பிரதானியாக கடமை புரிந்துள்ளார்.

இவர் தற்போது பொலிஸ் பணியிலிருந்து முற்றுமுழுதாக ஓய்வு நிலை பெற்று செல்கின்ற மையால் இந்நிகழ்வில், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளை அதிகாரி ஹெட்டியாரச்சி, கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பொலிஸ் மா அதிபர் சமுத்திர ஜீவன் மற்றும் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினர், இராணுவத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது இன்றையதினம் (07.09.2023) கிளிநொச்சி பொது விளையாட்டு மைதானத்தில் பொலிஸ் அணிவகுப்பு மரியாதைகளை ஏற்றுக்கொண்டு பின்னர் தனியார் விடுதியில் கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.